Welcome to ஆரோக்கிய வாழ்க்கை

நல்ல கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே!

Thursday, September 26, 2019

// // Leave a Comment

மூக்கடைப்பை சரிசெய்யும் வீட்டு வைத்திய டிப்ஸ்


அடிக்கடி மூக்கடைத்துக்கொள்ளும் பிரச்னை குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும், சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை சற்று அதிகமாகவே காணப்படும். குழந்தைகளும் இதில் அதிகம் பாதிக்கப்படுவர். என்ன செய்யலாம்? சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே முழுமையான குணம் கிடைக்கும்.


மூக்கடைப்பை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்

குளியல்

மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்யும். கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றும். தலைக்குளியல்தான் நல்லது. தோள்ப்பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே உருவாக்கி கொண்டது. குளியல் என்றால் தலை முழுகுதல் என்றே பெயர். இதுவே ஆரோக்கியமான குளியல். உடல் சூட்டை குறைக்கும்.


மூக்கை சுத்தம் செய்யும் பாட்

பல ஆர்கானிக் கடைகளில், ஆன்லைனில் மூக்கை சுத்தம் செய்யும் பாட் கிடைக்கிறது. அதை வாங்கி மூக்கை அவ்வப்போது சுத்தம் செய்திட எந்த மூக்கடைப்பும் சைனஸ் தொல்லைகளும் வராது. மூச்சு பிரச்னைகள்கூட குறையும்.


தேன் மிளகு

10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம்.


கைக்குட்டை

கைக்குட்டையில் 2-3 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு நீங்கும்.


ஒத்தடம்

இளஞ்சூடான நீரில் ஹாட் பேக் ஒத்தடம் கொடுப்பதை போடவும். இளஞ்சூடாகவே, மூகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். குறிப்பாக மூக்கு, மூக்கை சுற்றி உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது நல்லது.


யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய்

யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு ஆவி பிடித்திட மூக்கடைப்பு நீங்கும். 3-4 சொட்டு விட்டாலே போதுமானது.


நீர்ச்சத்து

நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீர்ச்சத்து குறைந்தால்கூட கடினமான அடைப்பு மூக்கில் ஏற்படலாம். நீர்ச்சத்து கொண்ட உணவுகள், மூக்கு துவாரம், மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை பிரஷர் கொடுத்து நீக்கும். உடலில் நீர்ச்சத்து போதிய அளவு இல்லையென்றால் எரிச்சல், மூக்கு அடைப்பு, வீக்கம் ஏற்படலாம்.


மூலிகை டீ

சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். மிளகு கஷாயம், இஞ்சி, சுக்கு கஷாயம் ஆகியவையும் நல்லது.


இஞ்சி ஸ்டீம்

வெந்நீரில் இஞ்சி துருவலை போட்டு ஆவி பிடிப்பதும் நல்ல தீர்வாகும். இஞ்சியின் காரம் மூக்கின் வழியாக சென்று அடைப்பை நீக்கும்.
Read More

Thursday, December 6, 2018

// // Leave a Comment

நெல்லிக்காய்யின் அற்புத சக்தி

தினமும் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர்.

தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.

பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.

ஐந்து சுவை கொண்டது

ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.

உயிர்சத்துக்கள்

உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.

பித்தம் தணிக்கும்

ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும். நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.

கர்ப்பிணிகளுக்கு

நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.

நினைவாற்றல் கூடும்

பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது. பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.
Read More

Monday, April 16, 2018

// // Leave a Comment

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள் நன்மைகள்

மல்லி விதை
சமையலில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மல்லி.

இதில் விட்டமின் ஏ, விட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ளது.

இதனை இரவு படுக்கும் முன் நீரில் ஊறவைத்து காலையில் எழுந்து குடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
  • சர்க்கரை அளவை பராமரிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது, கொத்தமல்லி விதை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் இதனை குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
  • ஒரு வாரம் தொடர்ச்சியாக காலையில் எழுந்தவுடன் இந்நீரை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • இதிலுள்ள விட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • இதிலுள்ள போர்னியோல் மற்றும் லினாலோல், செரிமான செயல்பாட்டிற்கு உதவும், மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும் பக்டீரியாக்களை அழித்து வயிற்று போக்கு பிரச்சனையை சரிசெய்யும்.
  • மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாமல் அவதிப்படும் பெண்கள் இதனை குடித்து வந்தால், சுழற்சி ஒழுங்குபடுத்தப்பட்டு அந்நேரத்தில் உண்டாகும் வயிற்று வலி, வாயுத் தொல்லை போன்றவை சரியாகும்.
Read More